Wednesday, January 12, 2011

தம்மாம் கா.ந.மன்றம் நடத்திய மஞ்சள் காமாலை தடுப்பூசி முகாம்! 605 பேர் பலன் பெற்றனர்!!

தம்மாம் காயல் நற்பணி மன்றத்தின் சார்பில் நடத்தப்பட்ட மஞ்சள் காமாலை நோய் தடுப்பூசி இலவச முகாமின் மூலம் 605 பேர் பயன் பெற்றுள்ளனர்.

சஊதி அரபிய்யா - தம்மாம் காயல் நற்பணி மன்றத்தின் சார்பில், 19.09.2010 அன்று மஞ்சள் காமாலை நோய் (Hepatitis - B) தடுப்பூசி இலவச முகாம் நடத்தப்பட்டது.



காயல்பட்டினம் சுபைதா மகளிர் மேனிலைப்பள்ளி, கே.டி.எம். தெருவிலிருக்கும் இத்திஹாதுல் இக்வானில் முஸ்லிமீன் - இஸ்லாமிய சகோதரத்துவ இணையம் (ஐ.ஐ.எம்.) ஆகிய இடங்களிலும், அன்று காலை 09.00 மணி முதல் நண்பகல் 12.30 மணி வரையிலும், பின்னர் மாலை 04.00 மணி முதல் 06.00 மணி வரையிலும் இத்தடுப்பூசி முகாம் நடத்தப்பட்ட இம்முகாமில், பிறந்த குழந்தை முதல் 15 வயது வரையுள்ள சிறுவர்-சிறுமியருக்கான இத்தடுப்பூசி இலவச முகாமின் மூலம் 605 பேர் பயன் பெற்றுள்ளனர். அவர்களுள், முதற்கட்டமாக 300 பேருக்கும், இரண்டாம் - மூன்றாம் கட்டமாக 15 பேருக்கும், ஏற்கனவே தடுப்பூசி போட்டு ஐந்து வருடங்களானவர்கள் பூஸ்டர் முறையில் 290 பேருக்கும் தடுப்பூசி போடப்பட்டது.



எதிர்பார்த்ததை விடவும் பயனாளிகளின் கூட்டம் அதிகமானதால் அனைவருக்கும் முழுமையாக முகாமில் தடுப்பூசி போட இயலவில்லை எனவும், அவர்களுக்கு வெகுவிரைவிலோ அல்லது அடுத்து தாங்கள் முகாம் நடத்தத் திட்டமிட்டுள்ள அக்டோபர் 17ஆம் தேதியன்றோ தடுப்பூசி போடப்படும் என முகாம் ஏற்பாட்டாளர்களான எம்.எம்.செய்யித் இஸ்மாஈல் தெரிவித்துள்ளார்.

அரபிய்யா.

Dammam Kayal Patnam Welfare Association Vaccination Phase I

No comments:

Post a Comment